8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

84பார்த்தது
8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றிடக்கோரி அந்தந்த முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதே போல் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி