பிரதமர் மோடிக்கு சரத் பவார் நன்றி

தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவர் சரத் பவார் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி எங்கு ரோட் ஷோக்கள் மற்றும் பேரணிகள் நடத்தினார்களோ அங்கெல்லாம் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். அதனால்தான் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது எனது கடமை. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் இது தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி