இந்தியாவில் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மூவை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கும் அழைக்கவில்லை. இதுதான் பாரதிய ஜனதாவும் பிரதமர் மோடியும் பழங்குடியினருக்கு அளிக்கும் மரியாதையா?
மத்திய அரசு பணிகளில் உள்ள 322 செயலாளர் இணைச் செயலாளர் பதவிகளில் 254 உயர் வகுப்பினர் பணியாற்றுகின்றனர். பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் அம்பானி, அதானி வளர்ச்சிக்கு தாரைவாக்கப்பட்டு இருக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சி ஒட்டுமொத்தமாக பட்டியலின மட்டும் பழங்குடியின மக்கள் நலனுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.