இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மயில்ராஜ் , கொடைக்கானல் நிலை அலுவலர் சக்திவேல் அவர்கள் முன்னிலையில் கொடைக்கானல் தீயணைப்பு வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ரோப் ரைடர் இயந்திரத்தின் மூலம் மூன்று மாடி கட்டிடத்தில் மேல் ஏறி இறங்கியும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த இயந்திரத்தின் உதவியுடன் செங்குத்து மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது மேலும் நவீன ரோப் ரைடர் கருவியானது ஆயிரம் அடி உயரத்திற்கு ஏறவும் இறங்கவும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது இத்தகைய நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவியை கொடைக்கானலுக்கு அறிமுகம் செய்தனர். அனைத்து அலுவலர்களையும் கொடைக்கானல் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.