போதைப் பொருட்களுக்கு துணைப் போகும் முதலமைச்சர்

573பார்த்தது
போதைப் பொருட்களுக்கு துணைப் போகும் முதலமைச்சர்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதியில் நேற்று அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நெல்லை முகம்மது முபாரக் அவர்களின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தர்மத்துப்பட்டியில் ஒன்றிய செயலாளர் சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் கழக பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று வேட்பாளரை அறிமுக செய்தனர்.

திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: - திமுகவை சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலையின் மீது தற்போது கத்தி தொங்கி கொண்டு உள்ளது. எந்த நேரத்தில் எந்த தீர்ப்பு வரும் என்று தெரியாது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கினர். ஒரு நீதிபதியே பெரியசாமி, பொன்முடி, நேரு உள்ளிட்ட 10, 13 தமிழக அமைச்சர்கள் மீது லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று விடுதலை செய்த அத்தனை அமைச்சர்கள் மீதான வழக்குகளை தோண்டி துருவி எடுத்து விசாரணை செய்து வருகின்றார்.

போதைப் பொருட்கள் கஞ்சாவுக்கு துணை போகும் முதலமைச்சராக ஐயா ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் யோக்கியன் என்று சொல்ல முடியாது என்று என்று பேசினார். ஆகவே பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்குகளை சேகரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி