பாஜக கூட்டணி அறிமுக கூட்ட விழா

551பார்த்தது
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் நடந்த பா. ஜ. க கூட்டணி அறிமுக கூட்டத்தில் தாமரை மத்தியில் மலரும், திண்டுக்கல்லில் மாங்கனி வெற்றி பெற வேண்டும் என வேட்பாளர் திலகபாமா தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் பா. ஜ. , கூட்டணியின் பா. ம. க. , வேட்பாளர் திலகபாமா அறிமுகக்கூட்டம் புதன்கிழமை இரவு 8 மணி அளவில் நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பா. ஜ. , கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் தனபாலன், கனகராஜ், பா. ம. க. , மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி, த. மா. க. , நிர்வாகி ராமதாஸ் உள்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல்லில் பா. ம. க. , வேட்பாளர் திலகபாமா பேசியது, மத்தியில் தாமரை மலரவும், திண்டுக்கல்லில் மாங்கனியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாம் அனைவருமே வேட்பாளர்கள் தான். திண்டுக்கல் மண்ணின் மகளாக நான் இருக்கிறேன். நாம் அனைவரும் பிரதமர் மோடி என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றினைகிறோம்.

பிரதமர் மோடியின் முகமாக, பா. ம. க. , நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணியின் முகமாக பாருங்கள். பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை ஓட்டிற்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், நாம் ஓட்டிற்க்கு பணம் கொடுப்பது வேட்பாளர்களால் மக்கள் ஏமாறுவது போல், மக்களால் வேட்பாளர்களும் ஏமாந்து விடுவர் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி