தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ள இடங்களில் இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பேன். சாலை வசதிகள் மேம்படுத்தப்படும், புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். 2014-2019 நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஏழை, எளிய மக்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டிதர நடவடிக்கை எடுத்தேன். மீண்டும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி நிதியை பெற்று வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்த, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு ஜெயவர்தன் கூறினார்
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து