மருத்துவர்கள் இவரை பரிசோதனை செய்ததில் இவர் மூளை சாவு அடைந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவரது மனைவி தனலட்சுமி வயது 52, என்பவர் கணவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உடல் உறுப்புகளை தானம் செய்யும் நபர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திட வேண்டும் என்ற அரசின் உத்தரவின்படி, ஏப்ரல் 22 ஆம் தேதி காலை விசுவகுடியில் கிருஷ்ணன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார் ஆட்சியர் கோகுல் கலந்துகொண்டு கிருஷ்ணனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார். மேலும் கிருஷ்ணனுக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.