10th Result: ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் மாநிலம் முழுவதும் பல மாணவ, மாணவிகள் தனித்துவமான சாதனைகளை படைத்துள்ளனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகளான அட்சயா மற்றும் அகல்யா இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். அதில் இருவருமே மொத்த மதிப்பெண்களான 500-க்கு 463 மதிப்பெண்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி