நீரில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றிய இளைஞர்கள் (வீடியோ)

85பார்த்தது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் ஓடும் ஜீலம் ஆற்றில் 7 வயது சிறுவன் ஒருவன் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ட ஜாகூர் அகமது மற்றும் ஷௌகத் அகமது ஆகிய இளைஞர்கள் தாமதிக்காமல் ஆற்றில் குதித்து சிறுவனை மீட்டனர். பின்பு சிறுவனை கரைக்கு இழுத்து வந்து சிபிஆர் சிகிச்சை அளித்து பின்னர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். தங்களது உயிரை பணயம் வைத்து சிறுவனை காப்பாற்றிய இளைஞர்களுக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி