3வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

71பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சந்தாநகரில் உள்ள தனியார் விடுதிக்கு, உதய் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அவர், மூன்றாவது மாடியை அடைந்ததும் பால்கனியில் இருந்து நாய் வெளியே ஓடியது. நாயை விரட்டியபோது, எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக கீழே விழுந்தார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள், உதய்யை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உதய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி