இளைஞர்களுக்கு நடுரோட்டில் சரமாரி அடி (வீடியோ)

75பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்கரில் மாடுகளை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். சோனு பிஷ்னோய் மற்றும் சுந்தர் பிஷ்னோய் என்ற இருவர் பிக்கப் லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் மாடுகளை கடத்த சென்றதாக சந்தேகம் அடைந்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் இறுதியில், லாரியில் தார்ப்பாயை திறந்து பார்த்தபோது அதில் எலுமிச்சை பழங்கள் இருந்துள்ளன. இச்சம்பவம் குறித்து சூரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி