சவுக்கு சங்கருக்கு எதிராக துடைப்பத்தை வைத்து பெண்கள் போராட்டம்

82பார்த்தது
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம் முன்பு பெண்கள் துடைப்பத்தை காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.‌ கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வைத்து வந்த போது, அங்கு திடீரென கூடிய பெண்கள் சவுக்கு சங்கர் இருந்த வாகனத்தை வழிமறித்து துடைப்பத்தை கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, கோவையில் சவுக்கு சங்கருக்கு எதிராக செருப்பைக் காட்டி பெண்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி