சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்

75பார்த்தது
சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்
சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு தயாரிக்க அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நேற்று சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி