அதிமுக ஒன்றிணையுமா? "Wait and See" - செல்லூர் ராஜூ

80பார்த்தது
அதிமுக ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு "Wait and See" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, "எங்கள் பொதுச்செயலாளர் சாணக்கியர். 4 1/2 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். பாரத பிரதமர் மோடியே தமிழக அரசை பாராட்டியுள்ளார். யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவே தோற்றுள்ளனர். 2026-ல் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கிய தனத்தை பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி