பாம்பு எதிரில் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

53பார்த்தது
பாம்பு எதிரில் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
பாம்பு நம் எதிரில் வந்தால் அச்சம் கொள்ள கூடாது. பாம்பு எதிரில் வரும் திசையில் அசைவுகளை செய்யவே கூடாது. பாம்பு இருக்கும் திசையில் ஓடவோ, ஏதாவது பாம்பு மீது போடவோ முயற்சிக்க வேண்டாம். பாம்பு பயப்பட கூடிய எந்த விஷயத்தையும் செய்ய கூடாது. இதன் மூலம் அது உங்களை தாக்க நேரிடும். பாம்பு இருக்கும் திசையில் இருந்து வேறு திசையில் செல்லுங்கள்.

பாம்பு உங்களை எதிர்நோக்கி வராமல் இருப்பதற்கு நீங்கள் ஒரு நீளமான குச்சியை எடுத்து தட்டுங்கள். பாம்புக்கு காதுகள் இல்லை என்பதால் அதிர்வுகள் இல்லாத இடத்தை நோக்கி ஓடும். குச்சிகளை வைத்து தட்டுவதன் மூலம் அது மாற்று திசைக்கு ஓட அதிக வாய்ப்புகள் உள்ளது.

தொடர்புடைய செய்தி