உடலில் உள்ள உயிரணுக்களின் ஒழுங்கற்ற வளர்ச்சியே புற்றுநோய். புற்று என்பது உடலுறுப்புகளிலுள்ள சிலவகைச் செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து பெருகி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. லட்சம் கோடிக்கணக்கிலான உயிரணுக்களால் ஆன மனிதவுடலின் எந்தவிடத்திலும் புற்று உருவாகலாம். எறும்பு புற்றில் ஒரு வகை தரைக்கு மேலாக மலை போல வளர்வது, மற்றொரு வகை தரைக்கு கீழே மணலை அரித்து அதே மணல் மூலம் மேலேயும் புற்றை உருவாக்குவது. இது போல தான் புற்றுநோய் வளர்ச்சியும்.