கர்நாடக அரசை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம்

78பார்த்தது
கர்நாடக அரசை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என நேற்று நடந்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடகா அரசு திட்டவட்டமாக கூறியது. இது குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு மற்றும் நீதிமன்றத்தை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடக அரசு எப்போதாவது கூறியுள்ளதா?. தண்ணீர் தர முடியாது என்று தான் கூறி வருகிறது. ஆகையால், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாட இருக்கிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி