கல்குவாரி வெடிவிபத்து - பதறவைக்கும் காட்சிகள்

23980பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தின், பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் இன்று காலை நடந்த எதிர்பாராத வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலியாகினர். இறந்தவர்களின் உடல் பாகங்கள்ள் குவாரியைச் சுற்றி சிதறிக் கிடக்கிறது கிடக்கிறது. இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிக சத்தத்துடன் வெடி வெடித்து புகைமூட்டம் எழுந்து கற்கள் வெடித்துச் சிதறிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.