அதிமுக இந்த மக்களவை தேர்தலில் 7 இடங்களில் டெபாசிட் இழந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஓபிஎஸ் ஒரு திசையை நோக்கி பயணிக்கிறார். அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. வடக்கிலிருந்து நம்மை ஆள அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. ஒரு தேசிய கட்சி இரண்டாம் இடம் பிடிப்பதை அனுமதிக்க முடியாது. அதிமுக ஒற்றுமையாக வேண்டிய நேரமிது என ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பை தொடங்கிய புகழேந்தி கூறியுள்ளார்.