மகளிர் குழு லோன் எடுப்பதில் தகராறு; பெண் மீது தாக்குதல்

53பார்த்தது
சிலுக்குவார்பட்டி பகுதியில் மகளிர் குழுவில் லோன் எடுப்பது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் மூக்கம்மாள் என்பவரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா சிலுக்குவார்ப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் மூக்கா மாள் (வயது 37) இவருக்கும் அதே பகுதியை சார்ந்த முத்துச்சோலை என்பவருக்கும் இடையே மகளிர் குழுவில் லோன் எடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது.

இதை மனதில் வைத்துக்கொண்டு முத்துச்சோலை,கவிதா, கிருஷ்ணமூர்த்தி, லீலாவதி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கொண்டு மூக்கமாளை தாக்கியதாக கூறப்படுகிறது. மூக்கமாள் காயம் அடைந்த நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் எம் ரெட்டியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி