சிவகாசி: 7ஆம் திருவிழா, அம்மன் சயன கோலத்தில் வீதி உலா...

61பார்த்தது
சிவகாசி, 'சயன' திருக்கோலத்தில், பூ பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மன்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில், பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பங்குனி பொங்கல் 7ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. கோவில் மண்டபத்தில், ஸ்ரீமாரியம்மன் 'சயன' திருக்கோலத்தில்
எழுந்தருளினார். இதனையடுத்து, சயன திருக்கோலத்தில் இருந்த ஸ்ரீமாரியம்மன், பூ பல்லக்கில் எழுந்தருளி சீர் வரிசைகளுடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர், ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'யானை' வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்தார். நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீமாரியம்மன் கோவில் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். திருவிழா ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி