ராஜபாளையம் பறக்கும் படையினர் பணம் பறிமுதல்

572பார்த்தது
ராஜபாளையம் பறக்கும் படையினர் பணம் பறிமுதல்
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சத்திரப் பட்டி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகில் பறக்கும் படை அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ரவிக்குமார் என்பவரை நிறுத்தி சோதனையிட்ட போது, அவரிடம் ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 410 இருந்தது. ஆனால் பணத்தை எடுத்து செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள், வட்டாட் சியர் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனர்

தொடர்புடைய செய்தி