உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

70பார்த்தது
உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற உலக சுகாதார தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பங்கேற்பு.

அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் இன்று ஏப்ரல் 7 உலக சுகாதார தின விழாவை முன்னிட்டு நோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை செவிலியர்கள், கை கழுவுதல் முறைகள் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும், நாடகம் போல செய்து காண்பித்து விழிப்புணர் ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், விருதுநகர் மாவட்டத்தில் பெண்களுக்கு ரத்த சோகை நோய் அதிகம் உள்ளது. இதை தவிர்க்க அவர்கள் சத்தான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசினார். இதில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி