ஜம்பை மலை அடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

79பார்த்தது
ஜம்பை மலை அடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
திருக்கோவிலூர் அருகே ஜம்பை கிராமத்தில் உள்ள மலையடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதை முன் னிட்டு இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி அளவில் விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், முதல் காலயாகசாலை பூஜையும் நடந்து, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நாளை காலை 8. 20 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது, பின்னர், 8. 30 மணிக்கு மூலவர் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், அப்பகுதி
மக்கள் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி