குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

66பார்த்தது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
விழுப்புரத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம், கோடி தெருவைச் சேர்ந்தவர் மணி மகன் அன்பரசன் (எ) அன்பு, 22; இவர் கடந்த பிப்ரவரி 27ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் வெங்கடேசனிடம் தகராறு செய்து தாக்கினார்.

விழுப்புரம் டவுன் போலீசார், கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்து, அன்பரசனை கைது செய்தனர்.

இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ். பி. , தீபக் சிவாச் பரிந்துரையை ஏற்று, அன்பரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள அன்பரசனிடம் திண்டிவனம் போலீசார் நேற்று வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி