திண்டிவனம் அடுத்த சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் ராஜசேகர், 33; கூலித் தொழிலாளி. திருமணம் ஆனவர். இவர், பத்தாம் வகுப்பு பயிலும், 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ராஜசேகரை கைது செய்தனர்.