அரசு பஸ் - பைக் மோதல் எஸ். எஸ். ஐ உயிரிழப்பு

577பார்த்தது
அரசு பஸ் - பைக் மோதல் எஸ். எஸ். ஐ உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அவரது மனைவி லட்சுமி இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உயிரிழந்தார்.
இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி