ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு

61பார்த்தது
ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கும், ரேஷனுக்கும் தொடர்பில்லை என உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் தர மாட்டார்கள் என்பது பொய்யான தகவல். ரேகை, கருவிழி பதிவு செய்யாதவர்களுக்கு, பதிவேட்டில் கையொப்பம் பெற்று பொருட்கள் வழங்கப்படுகின்றன என உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. எந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி