விழுப்புரத்தில் விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளை

68பார்த்தது
விழுப்புரத்தில் விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளை
விழுப்புரம் எம்.ஜி. ரோடு, மீன் மார்கெட் அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் நேற்று மதியம் 1:25 மணிக்கு மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. சுவாமி வீதியுலாவாக, கே.கே. ரோட்டில் உள்ள சுடுகாட்டை நோக்கி ஊர்வலமாக சென்றது. 

அப்போது பக்தர்கள் பலர் சுவாமி வேடம் அணிந்து சென்றனர். சுடுகாட்டிற்கு சென்றவுடன் மக்கள் சுவாமிக்கு கொண்டு வந்த படையல்கள் மற்றும் சில்லறை காசுகள் வீசப்பட்டதை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இரவு 7:00 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் வீதியுலாவும், இன்று மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து வரும் மார்ச் 2ம் தேதி கும்ப படையல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி