வேலூர்: பேனில் பிணமாக தொங்கிய வாலிபர் - மனைவி அதிர்ச்சி

4020பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளிதான் பட்டறை பவானி நகர் 2வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஆரோன் மகன் விஜயகுமார். இந்த நிலையில் இவருக்கு 6 மாத காலமாக அதிகமாக வயிற்று வலி இருந்துள்ளது. மேலும் சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவருக்கு 23ஆம் தேதி அன்று அதிக வயிற்று வலி இருந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியில் வராமல் முகம் சோர்வாக காணப்பட்டுள்ளார். இரவு தன் மனைவியுடன் பேசி விட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார் மறுநாள் அதிகாலையில் ஆறு மணிக்கு மனைவி எழுந்து பார்த்த பொழுது வீட்டில் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் உடனே மனைவி மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து விஜயகுமாரின் உடலை மீட்டு அவர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே மனைவி மெரினா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் விஜயகுமார் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி