வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் அவர் அளித்த பேட்டியில், "இஸ்லாமிய மக்கள் என்னை பொது வேட்பாளராக தான் பார்க்கிறார்கள். என்னை முற்றிலும் இஸ்லாமிய மக்கள் நம்புகிறார்கள்.
இஸ்லாமியர்களின் வாக்கு கடந்த முறை ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு சென்றது. ஆனால் இந்த முறை அப்படி இருக்காது இந்த முறை பிரியும். பெண்களும் ஏழை இஸ்லாமியர்களும் எனக்கு வாக்களிப்பார்கள். திமுக மீது வெறுப்பு உள்ளது. மன்சூர் அலிகான் கூட 30, 000 வாக்குகள் பெறுவார். திமுகவுக்கு 20 சதவீதத்திற்கும் மேல் இஸ்லாமியர்களின் வாக்கு செல்லாது.
வேலூரில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஓட்டுகள் பிரியும். கடந்த முறை திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இஸ்லாமியர்களால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி இருக்காது. நாங்கள் 25 சதவீதம் எதிர்பார்க்கிறோம், "என்றார்.