கர்ப்பிணி தற்கொலை வழக்கில் கணவன் கைது!

1926பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு மலை கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி குமாரி (17). இவரும், அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (24). என்பவரும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியில் சஞ்சீவிகுமாரி வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சஞ்சீவி குமாரிக்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆனதால், இந்த வழக்கு திருப்பத்தூர் சப்- கலெக்டர் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து விசாரணையில், சஞ்சீவி குமாரி தற்கொலை செய்து கொண்ட போது 6 மாத கர்ப்பிணியாக இருந்ததும், அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சஞ்சீவி குமாரியை கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதையடுத்து அய்யப்பனை திருப்பத்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி