முள்ளம்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது!

76பார்த்தது
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் வனவர் தலைமையில் வனப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் கம்புகுடி வனவட்டாரம் காப்பு நலம், கம்புகுடி சீரிஸ் பீட், பழைய பாளையம் கிழக்கு நிலத்துண்டு வழி சரகம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பழையபாளையம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி (55), திருப்பதி ஆகியோர் உரிமம் இல்லாத துப்பாக்கியை பயன்படுத்தி முள்ளம்பன்றியை கொன்று இறைச்சியை சமைத்துக் கொண்டு இருந்தனர்.

இதை பார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி