எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு மனு நாள் நடைபெற்றது

58பார்த்தது
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்வு மனுநாள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு மனுநாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது. இச்சிறப்பு மனுநாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் அளித்து குறைகளை கூறி வருகின்றனர். அது மட்டும் இன்றி வாரத்தில் உள்ள அனைத்து வேலை நாட்களிலும் பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இன்று நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனுநாளில் 13 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ் பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி