தேர்தல் பணிக்கு செல்வோரை வழி அனுப்பி வைத்த ஆட்சியர்!

51பார்த்தது
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரக்கோணம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 1203 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 250 காவல்துறையினரை அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு முடிந்து தங்களுடைய வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் பணிகளுக்காக பேருந்தில் செல்வதை அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் சுனில் குமார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.


இந்த நிகழ்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான பாத்திமா மற்றும் வட்டாட்சியர்கள் செல்வி, விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி