இரு தரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது!

68பார்த்தது
இரு தரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாங்கிஷாப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மோதலில் 2 நபர்களுக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த உமராபாத் போலீசார் அங்கு இருந்தவர்களை விரட்டி அடித்தனர்.

இதில் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தேவலாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் ஆம்பூர் ஆசாப் நகர் பகுதியை சேர்ந்த முபாரக் அலி (வயது 23) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி