ஆந்திர மாநில நலனுக்காக 11 நாள் விரதம் இருக்கும் பவன் கல்யாண்

69பார்த்தது
ஆந்திர மாநில நலனுக்காக 11 நாள் விரதம் இருக்கும் பவன் கல்யாண்
ஆந்திர மக்களின் நலனுக்காக 11 நாட்கள் வராஹி அம்மனுக்கு விரதம் இருக்கப் போவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் பவன் கல்யாண் வராஹி தேவியை வழிபட்டு வராஹி விஜய யாத்திரையை தொடங்கி தீட்சை எடுத்து இருந்தார். இந்த நிலையில் ஆந்திர மக்களுக்காக தற்போது விரதத்தை தொடங்கி இருக்கிறார். வராஹி அம்மனின் விரத விதிகளை கடைபிடிப்பது கடினம் என கூறப்படுகிறது. இருப்பினும் மக்கள் நலனுக்காக பவன் கல்யாண் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி பொங்க கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி