கேரள அரசின் அமைச்சர்கள் இருவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில்
போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவராகோவில் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்தனர். அவர்களுக்குப் பதிலாக கே.பி.கணேஷ் குமார், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக டிசம்பர் 29ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். இடதுசாரி கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூட்டணி கட்சி எம்எல்ஏக்களான கே.பி.கணேஷ் குமார், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அமைச்சர்களாக இருப்பார்கள்.