இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக
சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இனி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கமாட்டேன் என கூறியிருந்தார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, விரேந்தர் சிங் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்கப்போவதாக கூறினர். இந்நிலையில் மல்யுத்த சம்மேளனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.