கர்ப்பிணி தற்கொலை வழக்கில் திருப்பம்: உடலை தோண்டி பரிசோதனை!

27478பார்த்தது
கர்ப்பிணி தற்கொலை வழக்கில் திருப்பம்: உடலை தோண்டி பரிசோதனை!
புதுக்கோட்டை: இலுப்பூர் அன்னவாசல் அருகே உள்ள ஊரப்பட்டியைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர். இவரது மனைவி விஜயநிலா (33). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ள நிலையில் விஜயநிலா மீண்டும் கர்ப்பமானார். கடந்த 8ஆம் தேதி அலெக்ஸாண்டர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த விஜயநிலா அன்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். இதையடுத்து விளத்துப்பட்டி விஏஓ அன்னவாசல் போலீசில் புகாரளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி நேற்று மாலை இலுப்பூர் தாசில்தார் சூரிய பிரபு முன்னிலையில் மருத்துவ குழுவினர் விஜயநிலா உடலை தோண்டியெடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் உடல் மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி