85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஈரோடு தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர் 21,805 மற்றும் மாற்றுத்திறனாளிகள் 9,824 பேர் உள்ளனர். இதில் 85 வயதுக்கு மேற்பட்டோரில், 2,201 முதியோர், 800 மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விருப்ப படிவமான 'படிவம் - 12டி' வழங்கினர். கடந்த, 4 முதல், 6ம் தேதி வரை வீடு தேடிச் சென்று இவர்களின் ஓட்டு பெறப்பட்டது. 3,001ல், 2,866 ஓட்டு மட்டுமே பதிவானது. விருப்ப படிவம் வழங்கிய, 135 பேர் ஓட்டு போடவில்லை.