தெலங்கானா மாநிலம் மேடக் நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சிகிச்சை அளித்ததற்காக மருத்துவமனையை பாஜக இளைஞர் அமைப்பினர் சூறையாடி, மருத்துவரின் காரை சேதப்படுத்திநற். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'நாங்கள் யாரையும் மதம் பார்த்து சிகிச்சை அளிப்பதில்லை எனவும் காயம் அடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்தது தவறா?' என மருத்துவர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த விடியோவை பார்த்த அனைவரும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.