பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 45 பேர் பலி

86750பார்த்தது
பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 45 பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக 46 பயணிகளுடன் தேவாலயத்திற்குச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கீழே பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. போட்ஸ்வானாவில் இருந்து மோரியா நோக்கி பயணித்த போது இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்தில் பயணித்த 45 பேர் உயிரிழந்த நிலையில், 8 வயது சிறுமி உயிர் பிழைத்துள்ளார். பேருந்து 165 அடி ஆழத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால், சில உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி