T20 போட்டி - மழையால் பாதியில் நின்ற ஆட்டம்

72பார்த்தது
T20 போட்டி - மழையால் பாதியில் நின்ற ஆட்டம்
இங்கிலாந்து - இந்தியா இடையே நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டது. முதலில் பேட் செய்த இந்தியா 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. ரோகித் (37), சூர்யா (13) கிரீஸில் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் மழை பெய்தது. இதனால், வீரர்கள் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து, பிட்ச்சில் தண்ணீர் தேங்காமல் இருக்க கவர்களால் மூடப்பட்டது. முன்னதாக இதேபோல் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் பெய்த மழையால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி