ராமச்சந்திர பெருமாள் மாட வீதி உலா

63பார்த்தது
ராமச்சந்திர பெருமாள் மாட வீதி உலா
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் ஒன்பது நாளான இன்று காலை சுவாமி தீர்த்தவாரி திருமஞ்சனம் நிகழ்வுக்காக ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி