உடுமலையில் மெய் சிலிர்க்க வைக்கும் பறவை காவடி ஊர்வலம்!

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 9ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில் வருகின்ற முக்கிய விழாவான 25-ம் தேதி தேரோட்டம் நடைப்பெறுகிறது.
இந்த நிலையில் சபரிமலை
ஸ்ரீ சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை சார்பில் பறவைக்காவடி அலகுகுத்தும் விழா, 9-ம் ஆண்டுபறவைக்காவடி தூக்க நேர்ச்சை உற்சவம், தேவராட்டம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் ஆகியவை நடைப்பெற்றது.
உடுமலை பஸ் நிலையம் அருகே தொடங்கிய
ஊர்வலத்தில் பெண்கள் அலகு குத்தியும் 20க்கு மேற்பட்ட பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு, ஒவ்வொரு கிரேன் வாகனத்திலும் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர். இந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பழைய பஸ் நிலையம், தளி சாலை, வடக்கு குட்டைவீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி, கொல்லம்பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. இதில் அலகுகுத்தி வந்தவர்கள் அந்த வாகனங்களில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு கைகளில் வாள் ஏந்தியபடி அங்குமிங்கும் ஆடியபடி வந்தனர்.
மேளதாளம் வாத்தியத்துடன் நடந்த இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த பறவைக்காவடி ஊர்வலத்திற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்தும் , ஆண்கள் தேவராட்டம் ஆடியும் சென்றனர் பறவை காவடிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராஜன் மற்றும் அற்புதராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி