உடுமலையில் கத்தி போடும் நிகழ்ச்சி- பக்தர்கள் வழிபாடு

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி பூச்சொரிதல், நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று தேர் திருவிழாவை முன்னிட்டு தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் சக்தி கலசம் எடுத்தல் மற்றும் கத்தி போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பூமாலை சந்தில் உள்ள செளவுண்டம்மன் கோவிலில் இருந்து இதற்கான ஊர்வலம் தொடங்கியது. மங்கள வாத்தியத்துடன் தீர்த்த குடங்களுக்கு தலைமை தாங்கி சக்தி கலசம் செல்ல அதற்கு முன்பாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இரண்டு கைகள் மற்றும் முதுகில் கத்தி போட்ட படி சென்றனர். ஊர்வலமானது சீனிவாசா வீதி, பசுபதி வீதி, தளிரோடு, பெரிய கடை வீதி வழியாக மாரியம்மன் கோவிலை அடைந்தது. அதன் பின்பு மாரியம்மனுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சக்தி கலசமானது ஒற்றை வாழைப்பழத்தில் எந்த விதமான ஆதரவும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடி கோவிலை சென்றடைந்தது பக்தர்கள் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிகழ்வில்
தேவாங்கர் சமுதாய தலைவர் மாணிக்கம், செயலாளர் திருமலைசாமி, தேவாங்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் சினிவாசன், கல்வி அறக்கட்டளை அறங்காவலர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி