உடுமலையில் சாலை விபத்தில் தந்தை மகன் உயிரிழப்பு

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலையில் நேற்று
ஏப்ரல் (26) இரவு வானவேடிக்கை பார்த்துவிட்டு சாதிக் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் உட்பட 5 பேர் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் செல்லும் பொழுது ராஜேந்திர ரோடு கார்னர் பகுதியில் சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது இதில் விபத்தில் கோவிந்தராஜ், தர்ஷன், சுவாதி, தர்ஷனா , ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சம்பவ இடத்தில் சிறுவன் தர்ஷன் பலியானார் கோவிந்தராஜ் மற்றும் இருவர் கோவை கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று கோவிந்தராஜ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி