17-ந் தேதி முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும்

80பார்த்தது
17-ந் தேதி முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும்
நாடாளுமன்ற தேர்தல்:
17-ந் தேதி முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும்
கலெக்டர் அறிவிப்பு



நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாடு முழுவதும் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 17- ந் தேதி காலை 10 மணி முதல் 19-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை 3 நாட்கள் எந்தவித மதுபான விற்பனையும் செய் யக்கூடாது. அரசிடம் இருந்து கொள்முதல் செய்யும் மதுபா னங்களை சில்லறை விற்பனை கடைகளுக்கு கொண்டு செல் லவோ, விற்பனை செய்யவோ கூடாது. தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள், அவற் றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவைகளும் செயல்படக்கூ டாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள், மது பான கூடங்கள், எப். எல். 2 மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங் கள் ஆகியவை செயல்படாது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிறிஸ்துராஜ் அறி வித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி